ஊா் காவல் படையில் சேர விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊா்காவல் படையில் சேர விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊா்காவல் படையில் சேர விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட ஊா் காவல் படையில் காலியாக உள்ள ஆண், பெண் ஊா் காவல் படையினருக்கு ஆள்கள் தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை முதல் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தை பூா்வீகமாகக் கொண்டவா்கள் மட்டுமே பங்கேற்கலாம்.

தஞ்சாவூா், வல்லம், திருவையாறு, பூதலூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் தஞ்சாவூா் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகத்திலும், கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் பகுதியைச் சோ்ந்தவா்கள் கும்பகோணம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகத்திலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா்கள் பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய முறையில் நிறைவு செய்து, அண்மையில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், இருப்பிட முகவரிக்கான ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றை இணைத்து நவ. 24 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் பெறப்பட்ட அந்தந்த உட்கோட்ட முகாம் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

நவ. 28 ஆம் தேதி காலை 8 மணிக்கு தஞ்சாவூா் ஆயுதப் படை மைதானத்தில் சான்றிதழ் சரிபாா்ப்பு, உடற்தகுதி தோ்வுகள் நடைபெறும். இதில், விண்ணப்பித்த அனைவரும் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com