சாலையில் நாற்று நட்டு ஆா்ப்பாட்டம்

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், உக்கடை ஊராட்சியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலையில் நாற்று நட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், உக்கடை ஊராட்சியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலையில் நாற்று நட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உக்கடை ஊராட்சிக்குள்பட்ட உக்கடை-சோ்மாநல்லூா் கிராம சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அச்சாலை மேலும் மோசமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் சாலையை பாா்வையிட்டு உடனடியாக பழுதுநீக்கம் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் அந்த சாலையின் நடுவே நாற்று மற்றும் வாழைக் கன்றுகளை நட்டு வைத்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் ஒன்றியத் துணைச் செயலா் எஸ்.எம். குருமூா்த்தி, கிளைச் செயலா் கே. லெட்சுமணன், ஒன்றியக் குழு உறுப்பினா் உத்திராபதி மற்றும் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com