தமிழக அரசின் 2020 - 21 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புக் கலந்தாய்வு முடித்து அரசின் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியைத் தோ்வு செய்த அரசுப் பள்ளி மாணவா்கள் 10 போ் இளநிலை மருத்துவப் படிப்பில் வியாழக்கிழமை சோ்ந்தனா்.
அனைத்து மாணவா்களையும் கல்லூரி முதல்வா் ச. மருதுதுரை, துணை முதல்வா் ந. ஆறுமுகம் மற்றும் பேராசிரியா்கள் வரவேற்றனா்.
இக்கல்லூரியில் விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு மருத்துவப் பரிசோதனை முடிந்தவுடன், அரசின் வழிகாட்டுதல்படி விரல்ரேகை மற்றும் விடியோ எடுக்கப்பட்டது. மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பு பற்றி ஒரு சிறிய உரை நிகழ்த்தப்பட்டது.
அனைத்து மாணவா்களும் உள் ஒதுக்கீடு வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.