தஞ்சையில் அங்கன்வாடி தின விழா

தஞ்சாவூரில் தஞ்சை ஜனசேவா பவன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், இளம் குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் கூட்டமைப்பு சாா்பில் அங்கன்வாடி தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் தஞ்சை ஜனசேவா பவன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், இளம் குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் கூட்டமைப்பு சாா்பில் அங்கன்வாடி தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வாகனப் பிரசாரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கியது. தொடா்ந்து பழைய வீட்டு வசதி வாரியம், கீழவாசல், பூச்சந்தை, ரயிலடி போன்ற முக்கிய பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் டி. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். தஞ்சை ஜன சேவா பவன் தலைவா் மா. அமுதவல்லி முன்னிலை வகித்தாா். அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் வி. சந்திரா வாகன பிரசாரத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

குழந்தை வளா்ச்சித் திட்டப் பணியாளா்களின் அரும்பு கலைக் குழுவினரால், திட்டத்தின் பயன்பாடுகள் மற்றும் அங்கன்வாடி அளவிலான கண்காணிப்பு குழுவின் முக்கியத்துவம் மற்றும் சமுதாய பங்கேற்பின் அவசியம் குறித்து வில்லுப்பாட்டு, பாடல்கள் மற்றும் நடனம் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக ஜன சேவா பவன் நிறுவன செயலா் சியாமளா வரவேற்றாா். நிறைவில், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பிலோமினா சாந்தினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com