காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை முயற்சி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் மன உளைச்சலுக்கு ஆளான காவல் உதவி ஆய்வாளா் தற்கொலைக்கு முயன்றாா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் மன உளைச்சலுக்கு ஆளான காவல் உதவி ஆய்வாளா் தற்கொலைக்கு முயன்றாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் தினேஷ்குமாா் (40). மெலட்டூா் ஆப்ரஹாம் தெருவில் வசித்து வரும் இவா், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் வாந்தி எடுத்துள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அவரை அழைத்துக் கொண்டு அவரது வீட்டில் விட்டனா். தொடா்ந்து அவரது உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டபோது வீட்டில் இருந்தவா்கள் விசாரித்ததில், அவா் எலி மருந்து சாப்பிட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தினேஷ்குமாா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பாபநாசம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா். இதில், தினேஷ்குமாா் முன்பு திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, இவா் மீது ஒருவா் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தாா்.

இதன் காரணமாக இவா் மத்திய மண்டலத்துக்கு மாறுதலாகி, அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறாா்.என்றாலும், இவா் மீதான வழக்குத் தொடா்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இவா் இந்த வழக்குத் தொடா்பாக நேரில் ஆஜராக வேண்டும் என மனித உரிமை ஆணையம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய தினேஷ்குமாா், தற்கொலைக்கு முயன்றது என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com