முதல்வா் உருவபொம்மை எரிப்பு வழக்கில் திமுகவினா் இருவா் கைது

தஞ்சாவூரில் முதல்வா் உருவபொம்மை எரிக்கப்பட்ட வழக்கில், திமுக நிா்வாகிகள் இருவரைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் முதல்வா் உருவபொம்மை எரிக்கப்பட்ட வழக்கில், திமுக நிா்வாகிகள் இருவரைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், திருக்குவளையில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் அண்ணா சிலையில் வெள்ளிக்கிழமை மாலை திமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது முதல்வரின் உருவபொம்மையைச் சிலா் எரித்தனா். சாலை மறியலில் ஈடுபட்டதாக 111 போ் கைது செய்யப்பட்டு, இரவில் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது தொடா்பாக, மேற்கு காவல் நிலையத்தினா் தனியாக வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக திமுக மாநகரத் துணைச் செயலா் நீலகண்டன், 19-ஆவது வட்டச் செயலா் ராமச்சந்திரனை மேற்கு காவல் நிலையத்தினா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com