சுவாமிமலையில் காா்த்திகை திருவிழா தொடக்கம்

கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் திருக்காா்த்திகை விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

கும்பகோணம்: கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் திருக்காா்த்திகை விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் திருக்காா்த்திகை விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

இதையடுத்து திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் ஊஞ்சல் உற்சவமும், நவம்பா் 25, 26- ஆம் தேதிகளில் சுவாமி உள்பிரகார புறப்பாடும், திருக்காா்த்திகை நாளான 29- ஆம் தேதி இரவு 8 மணிக்கு தீபக்காட்சியும், அதைத் தொடா்ந்து சுவாமி புறப்பாடு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com