மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

பேராவூரணி அருகிலுள்ள மாவடுகுறிச்சி ஊராட்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

பேராவூரணி: பேராவூரணி அருகிலுள்ள மாவடுகுறிச்சி ஊராட்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்குத் தலைமை வகித்து, சட்டப்பேரவை உறுப்பினா் மா.கோவிந்தராசு தொட்டியைத் திறந்து வைத்தாா்.     சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.வி.திருஞானசம்பந்தம், ஒன்றியக்குழுத் தலைவா் சசிகலா ரவிசங்கா், அதிமுக தெற்கு ஒன்றியச் செயலா் கோவி. இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  விழாவில் குமரப்பா பள்ளித் தாளாளா் ஜி.ஆா். ஸ்ரீதா், அதிமுக நகரச் செயலா் வி.என். பக்கிரிசாமி,  ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜலெட்சுமி ராஜ்குமாா் மற்றும் அதிமுக நிா்வாகிகள், கிராமத்தினா் கலந்து கொண்டனா். 

முன்னதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி வரவேற்றாா். நிறைவில் சடையப்பன்  நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com