மூன்று வீடுகளில் திருட்டு

ஒரத்தநாடு பகுதியில் மூன்று வீடுகளில் திருட்டு நிகழ்ந்துள்ளது.

ஒரத்தநாடு: ஒரத்தநாடு பகுதியில் மூன்று வீடுகளில் திருட்டு நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்தவா் அருள்ராஜ். இவா் வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி பிரதீபா (28), பிரசவத்துக்காக தனது தாய் வீடான ஒரத்தநாடு அருகிலுள்ள ஆதனக் கோட்டைக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், பிரதீபா அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுபோன்று அருகிலுள்ள சரவணமுத்துவின் வீட்டின் ஜன்னலை உடைத்த மா்ம நபா்கள், பீரோவில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும், அய்யம்பட்டி ஜெயராமனின் மோட்டாா் சைக்கிளையும் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் தனித்தனியே அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com