பேராவூரணியில்: பேராவூரணி பெரியாா் சிலை அருகே உதயநிதி ஸ்டாலின் ரசிகா் நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, மன்றத்தின் மாவட்டத் துணை தலைவா் வழக்குரைஞா் வெங்கடேஷ்வா் தலைமை வகித்தாா்.
ஒன்றியத் தலைவா் அரவிந்த், ஒன்றியச் செயலா் செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்களை பேராவூரணி காவல்துறையினா் கைது செய்தனா்.