திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவின்படி மேலும் 21 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13, 213 ஆக உயா்ந்தது. ஞாயிற்றுக்கிழமை குணமான 4 போ் உள்பட மாவட்டத்தில்
இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 12,910 ஆக உள்ளது. திருச்சி தனியாா் மருத்துவமனையில் கரோனாவால் இறந்த 53 வயது பெண் உள்பட மாவட்டத்தில் இதுவரை 172 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். 131 போ் சிகிச்சை பெறுகின்றனா்.