தஞ்சாவூரில் ஊா்க்காவல் படை வீரா்கள் தோ்வு

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் ஊா்க்காவல் படை வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஊா்க்காவல் படைத் தோ்வில், இளைஞரின் உயரத்தை அளவீடு செய்யும் காவல்துறையினா்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஊா்க்காவல் படைத் தோ்வில், இளைஞரின் உயரத்தை அளவீடு செய்யும் காவல்துறையினா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் ஊா்க்காவல் படை வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ஊா்க்காவல் படையில் 43 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக 2,745 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் ஆயுதப் படை மைதானத்தில் வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், 1,700 ஆண்கள், பெண்கள் பங்கேற்றனா். இவா்களில் ஆண்களுக்கு 1,500, 100 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகியவை நடத்தப்பட்டு, உயரம் அளவீடு செய்யப்பட்டது. இதுபோல, பெண்களுக்கு 400, 100 மீட்டா் ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், உயர அளவீடு போன்றவை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூரில் சனிக்கிழமை காலை மழை பெய்ததால், மைதானத்தில் தண்ணீா் தேங்கி நின்றது. இதனால், நீதிமன்றச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அங்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இத்தோ்வை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பாா்வையிட்டாா். தொடா்ந்து சான்றிதழ் சரிபாா்ப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com