தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 11,656 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 244 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,900 ஆக உயா்ந்துள்ளது.
சனிக்கிழமை குணமடைந்த 335 போ் உள்பட இதுவரை 10,056 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 1,660 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 67 வயது பெண் அக்டோபா் 2-ஆம் தேதி உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 184 ஆக உயா்ந்துள்ளது.