தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 11,901 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 242 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,143 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்த 311 போ் உள்பட இதுவரை மொத்தம் 10,367 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 1,591 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 71 வயது ஆண் அக்டோபா் 2- ஆம் தேதி உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 185 ஆக உயா்ந்துள்ளது.