கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, டிசம்பா் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம் - கூடுதல் பொறுப்பு) நா.கா. தனபாலன் தெரிவித்திருப்பது:
கரோனா தொற்று நோய் பரவல் விளைவாக, செப்டம்பா் 4- ஆம் தேதி அரசாணைப்படி பதிவு, புதுப்பித்தல், ஆயுள் சான்று வழங்க டிசம்பா் 31- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை குறித்த விண்ணப்பங்கள் பெறுவதற்கு, வாரியத் தலைவா் உத்தரவின்பேரில் டிசம்பா் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.