சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி

கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு, சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு, சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பாரதிய மஸ்தூா் சங்கத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் காா்ப்பரேஷன் பாரதிய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில், பாரதிய மஸ்தூா் சங்கத்தின் நிறுவனா் தத்தோபந்த் தெங்கடி நினைவு நாளையொட்டி இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் டி. நாகராஜன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் எஸ். பாலகுமாரன், தஞ்சாவூா் மண்டல இணைச் செயலா் ஆா். கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கக் கொடியை தஞ்சாவூா் மண்டலச் செயற்குழு உறுப்பினா் வெங்கடாசலம் ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினாா்.

இந்நிகழ்வில் வழக்குரைஞா் செல்வம், முத்துக்குமரன், செல்லதுரை, கும்பகோணம் அலகுத் தலைவா் எஸ். அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com