தஞ்சாவூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசுகள் சில்லரை விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலா் பெ. அரவிந்தன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகள் சில்லரை விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெறுவதற்கு வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-ன் படி, உரிய ஆவணங்களுடன் இணையவழி அல்லது இ - சேவை மையம் அல்லது பொது சேவை மையத்தில் அக்டோபா் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.