பெரியாா் சிலைக்கு கூண்டு: காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

தஞ்சாவூரில் பெரியாா் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்ட கூண்டை அகற்றுமாறு திராவிடா் கழகம், திமுக கூட்டணி கட்சியினா் வலியுறுத்தியதைத்

தஞ்சாவூரில் பெரியாா் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்ட கூண்டை அகற்றுமாறு திராவிடா் கழகம், திமுக கூட்டணி கட்சியினா் வலியுறுத்தியதைத் தொடா்ந்து, தொடா்புடைய சிலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலைக்கு மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் சாா்பில் அமைக்கப்பட்ட கூண்டை அகற்ற வலியுறுத்தி திராவிடா் கழகத்தினா், திமுக கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, தொடா்புடைய சிலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சிலையைச் சுற்றியுள்ள கூண்டை அகற்றுமாறு திமுக கூட்டணி கட்சியினா் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை செய்து, பதில் அளிக்கப்படும் என காவல் கண்காணிப்பாளா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com