அய்யம்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அய்யம்பேட்டை பேரூராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தை தொடங்க வேண்டும், கரோனா கால நிவாரணமாக குடும்பத்துக்கு மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யம்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் வி. உமாபதி தலைமை வகித்தாா். அமைப்பின் நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து அய்யம்பேட்டை செயல் அலுவலா் மு.பொன்னுசாமியிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.