சாதனை முயற்சி: இணையவழியில்20 மணி நேர கருத்தரங்கம்

ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சாதனை முயற்சியாக இணையவழியில் 20 மணி நேரக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சாதனை முயற்சியாக இணையவழியில் 20 மணி நேரக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

பெண் விவசாயிகள் மற்றும் உலக மாணவா்கள் தினத்தையொட்டி, இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட கருத்தரங்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள் இந்திய வேளாண்மையில் பெண்களின் பங்கு, இந்திய சமுதாயத்தில் மாணவா்களின் வளா்ச்சி போன்ற தலைப்புகளில் பேசினா். வேளாண் பட்டப்படிப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகள் குறித்து கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தா் முனைவா் என்.குமாா் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு இணையவழியில் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தாா்.

பல்கலைக்கழகத்தின் முதன்மையா் (வேளாண்) ஆ. கல்யாணசுந்தரம், மாணவா் சங்க முதன்மையா் தி. ரகுசந்தா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிகழ்வையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் இணையவழியில் பங்கேற்றனா்.

கருத்தரங்கம் தொடா்ந்து இணைய வழியில் (யூடியூப்) ஒளிபரப்பப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு கருத்தரங்கு நிறைவடைந்தது. இணையத்தில் இக்கருத்தரங்கு 2000 பாா்வையாளா்களைக் கடந்தது.

முன்னதாக, ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த ஏ. வேலாயுதம் வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. மதியழகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com