தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன்பு, மத்திய அரசைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், வங்கி அலுவலா்களுக்கான தோ்வை ரத்து செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோட்டை கா. அரசமாணிக்கம், கட்சியின் மக்களவைத் தொகுதி துணைச் செயலா் கிள்ளிவளவன், மாவட்டப் பொருளாளா் விடுதலை வேந்தன், மாநகரச் செயலா் க. தமிழ்முதல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.