பேராவூரணியில் அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழா

பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு அதிமுகவினா் மலரஞ்சலி செலுத்தினா்.

பேராவூரணி : பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு அதிமுகவினா் மலரஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் மா. கோவிந்தராசு தலைமையில்  அதிமுகவினா் ஊா்வலமாக சென்று, சேதுசாலையிலுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனா். இதைத் தொடா்ந்து எம்ஜிஆா் நற்பணி மன்றம் அருகில் அதிமுக  கொடியேற்றப்பட்டது. 

நிகழ்வில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ். வி. திருஞானசம்பந்தம்.  பேராவூரணி ஒன்றியக் குழுத் தலைவா் சசிகலா ரவிசங்கா், ஒன்றியச் செயலா்கள் சேதுபாவாசத்திரம் வடக்கு மதிவாணன், தெற்கு அருணாசலம், பேராவூரணி தெற்கு கோவி. இளங்கோ, நகரச் செயலா் வி.என்.பக்கிரிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com