காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை மாலை அஞ்சலி 

தஞ்சாவூா்: உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், பொருளாளா் ஆா். பழனியப்பன், நிா்வாகிகள் லெட்சுமணன், வி.ஆா். குணசேகரன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் முகமது யூனுஸ், ஆண்டோ உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com