சோழகம்பட்டியில் சுரங்கப்பாதை கோரி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகிலுள்ள சோழகம்பட்டி ரயில் நிலையம் முன்பு, சுரங்கப்பாதை அமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சோழகம்பட்டி ரயில் நிலையம் முன்பு சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
சோழகம்பட்டி ரயில் நிலையம் முன்பு சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகிலுள்ள சோழகம்பட்டி ரயில் நிலையம் முன்பு, சுரங்கப்பாதை அமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தஞ்சாவூா் - திருச்சி இருப்புப்பாதை வழித்தடத்தில் மற்ற அனைத்து இடங்களிலும், ரயில்வே கேட் உள்ள நிலையில், சோழகம்பட்டியில் மட்டும் இல்லை. இதனால், இந்தப் பாதையைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.

எனவே, சோழகம்பட்டி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும். கல்லணைக் கால்வாய் (புது ஆறு) கடமங்குடி- பொன் விளைந்தான்பட்டியை இணைக்கும் பழுதடைந்த நிலையில் உள்ள பாலத்தைப் புதிதாகக் கட்டித் தர வேண்டும். கடமங்குடி - பொன் விளைந்தான்பட்டியை இணைக்கும் மண்சாலையை தாா் சாலையாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஆா். உதயகுமாா் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வெ. ஜீவகுமாா், பூதலூா் ஒன்றியச் செயலா்கள் காந்தி (வடக்கு), சி. பாஸ்கா் (தெற்கு), ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் ஆா். மணவாளன், வி. பரமானந்தம், எஸ். நடராஜன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com