தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை மாலையும் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், சில இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
மதுக்கூா் 25 மி.மீ, வல்லம் 19, பாபநாசம் 6, தஞ்சாவூா் 3, அய்யம்பேட்டை 2, கும்பகோணம் 1 மி.மீ. இதேபோல, தஞ்சாவூா், திருவையாறு உள்ளிட்ட இடங்களில் பரவாக மழை பெய்தது.