தஞ்சாவூா்: தஞ்சாவூரில் கஞ்சா விற்ற இளைஞரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் வடக்கு வாசல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், மேற்கு காவல் நிலையத்தினா் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி, 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வடக்கு வாசலைச் சோ்ந்த முருகன் (30) கைது செய்யப்பட்டாா்.