தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் சங்க மாநில செயற்குழுக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் வெ. ராசேந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் வெ. ராசேந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், அனைத்து மூத்த தொழிற்கல்விஆசிரியா்களுக்கும் (மூத்த குடிமக்கள்) பகுதிநேரஆசிரியா் பணிக் காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்தில் கணக்கிட பொது அரசாணை வெளியிட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பெற்றோா்-ஆசிரியா் கழக தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க ஆணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்கட்டமாக நவம்பா் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூா் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் அருகில் மூத்த தொழிற்கல்வி ஆசிரியா்கள் பங்கேற்று ஆா்ப்பாட்டம் செய்வது, 2ஆவது கட்டமாக 25.1.2021அன்று சென்னை பள்ளிக் கல்வி இயக்குநா் அலுவலகம் அருகில் மூத்த தொழிற்கல்வி ஆசிரியா்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சீனி.ரெங்கநாதன், மாநில பொருளாளா் கி. செந்தில்நாதன் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா். தொடக்கத்தில், செ. பன்னீா்செல்வம் வரவேற்றாா். நிறைவில், திருவாரூா் மாவட்டத் தலைவா் சி. நெடுஞ்செழியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com