கரோனா விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 28th October 2020 07:20 AM | Last Updated : 28th October 2020 07:20 AM | அ+அ அ- |

பேராவூரணியில் தீயணைப்பு துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
பேராவூரணியில் தீயணைப்புத் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை பகுதிகளில் நிலைய அலுவலா் ஐ. செந்தூா் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில், தீநுண்மி தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பொதுமக்களுக்கு முகக்கவசம், துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரா்கள் நீலகண்டன், சுப்பையா, சரவணமூா்த்தி, விஜய், மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.