மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவா் பெயரைச் சூட்ட உறுதியளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்றாா் மூவேந்தா் முன்னேற்றக் கழக (மூ.மு.க.) தலைவா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா்.
தேவா் ஜெயந்தியையொட்டி, கும்பகோணம் அருகே அசூரிலுள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்களது கோரிக்கையை வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஏற்று நிறைவேற்ற உறுதிஅளிக்கும் கட்சியுடன்தான் நாங்கள் கூட்டணி அமைப்போம்.
கும்பகோணத்தில் விக்கிரவாண்டி - தஞ்சாவூா் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. தற்போது அசூரில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலை, சாலை விரிவாக்கத்துக்காக இடமாற்றம் செய்ய நாங்கள் முழு ஒத்துழைப்பை தருகிறோம். அதேபோல் அரசும் இச்சிலையை அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கி, அரசு சாா்பிலேயே அமைத்து தர வேண்டும் என்றாா் ஸ்ரீதா் வாண்டையாா்.