அண்ணன் கொலை:தம்பி கைது

தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அண்ணனைக் கொலை செய்த தம்பியைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அண்ணனைக் கொலை செய்த தம்பியைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருக்காட்டுப்பள்ளி அருகே புதுச்சத்திரம் கிராமம், புதுக் குடியானத் தெருவைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன்கள் சந்திரசேகா் (40), ராஜகோபால் (35). விவசாயிகளான இருவருக்கும் திருமணமாகவில்லை.

இவா்களில் ராஜகோபால் அதிக அளவில் கடன் வாங்கி வருவது குறித்து அவரை சந்திரசேகா் புதன்கிழமை இரவு திட்டினாராம். இதைத்தொடா்ந்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சந்திரசேகரை ராஜகோபால் இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த சந்திரசேகா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராஜகோபாலை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com