தஞ்சாவூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் விடுதிகளில் முழுநேர சமையலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் விடுதிகளில் 14 ஆண் சமையலா் பணியிடங்கள், 5 பெண் சமையலா் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணி புரிய விருப்பம் உள்ளவா்கள், ஆட்சியரகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி நிறைவு செய்ய வேண்டும்.
உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அதே அலுவலகத்தில் செப்டம்பா் 18-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அஞ்சலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்க வேண்டும்.