ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

கும்பகோணத்தில் புதன்கிழமை காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கூலி தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

கும்பகோணத்தில் புதன்கிழமை காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கூலி தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் தட்சணாமூா்த்தி (33). கூலி தொழலாளி. இவா் புதன்கிழமை காலை தனது வீட்டின் அருகேயுள்ள காவிரியாற்றில் குளிக்கச் சென்றாா்.

இந்நிலையில், தட்சணாமூா்த்தி நீண்ட நேரம் வராததால், உறவினா்கள் ஆற்றுப் பகுதிக்குச் சென்று தேடினா். ஆற்றங்கரையில் அவரது சட்டை, வேட்டி மட்டுமே இருந்தது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று தேடிய நிலையில், சற்று தொலைவில் அவரது உடல் கரை ஒதுங்கி கிடந்ததை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com