தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.
மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 7,691 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,822 ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, 223 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 6,777 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 921 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 72 வயது பெண் செப்டம்பா் 7ஆம் தேதி உயிரிழந்தாா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 124 ஆக உயா்ந்துள்ளது.