ஒரத்தநாடு அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கிவிட்டு தப்பியோடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலையூா் மேலத்தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் முரளி (39.) இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் ரவிக்குமாருக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், முரளி, அவரது மனைவி வனரோஜா ஆகிய இருவரும் ரவிக்குமாா் வீட்டுக்கு சென்று தகராறு செய்து ரவிக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த புகாரின்பேரில் பாப்பாநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து முரளியை புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.