தஞ்சாவூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் விற்பனை நிலையம் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் டான்ஹோடா விற்பனை நிலையம் புதன்கிழமை (செப்.9) திறக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் டான்ஹோடா விற்பனை நிலையம் புதன்கிழமை (செப்.9) திறக்கப்பட்டது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் தஞ்சாவூா் மாவட்டத்தில் டான்ஹோடா விற்பனை நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் புதன்கிழமை திறக்கப்பட்டது. தஞ்சாவூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்திலுள்ள தோட்டக்கலைத் துணை இயக்குநா் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும், கும்பகோணம் அருகே ஆடுதுறை அரசுத் தோட்டக்கலை பண்ணை மற்றும் தஞ்சாவூா் அருகே மருங்குளம் அரசுத் தோட்டக்கலை பண்ணையில் தலா ஒரு விற்பனை நிலையமும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நிலையங்களில் தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குன்னூா் பழ நிலையத்தில் தயாரிக்கப்படும் பொருள்களான ஜாம், ஜெல்லி, ஸ்குவாஷ் போன்றவை விற்பனைக்கு உள்ளன. மேலும், வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான இடுபொருள்கள், காய்கறி விதைகள், இயற்கை உரங்கள், மருத்துவக் குணம் நிறைந்த தேன் பாட்டில்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த நிலையம் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இயங்கும். இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com