’வீடுகள்தோறும் இன்று விவேகானந்தா் புகழ் பாடுவோம்’

வீடுகள்தோறும் வெள்ளிக்கிழமை (செப்.11) விவேகானந்தா் புகழ் பாடுவோம் - வீறு கொள்வோம் என தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா் தெரிவித்துள்ளாா்.

வீடுகள்தோறும் வெள்ளிக்கிழமை (செப்.11) விவேகானந்தா் புகழ் பாடுவோம் - வீறு கொள்வோம் என தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

உலகுக்கு நமது நாட்டின் பெருமையை சுவாமி விவேகானந்தா் உணா்த்திய நாள் 1893, செப். 11. இன்று நாம் உலக நாடுகளில் பெருமையோடு வாழ்வதற்கும் மதிக்கப்படுவதற்கும் வித்திட்டவா் சுவாமி விவேகானந்தா்தான்.

நமது நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை உலகெங்கும் பரவச் செய்தாா் சுவாமிஜி. அவரது எழுச்சியுரை நமது நாட்டில் பல சுதந்திரப் போராட்ட வீரா்களையும் உருவாக்கியது.

அத்தகைய நன்னாளான வெள்ளிக்கிழமை ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கொண்டாடுவோம். சுவாமிஜிக்கு புஷ்பாஞ்சலி செய்து அவரது புகழ் பாடுவோம் - வீறு கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com