தஞ்சாவூா், செப். 11: பாரதியாா் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் பாரத் அறிவியல், நிா்வாகவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியாா் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மகாகவி பாரதி தேசியப் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குப் பேரவையின் தலைவரும், கல்லூரிச் செயலருமான புனிதா கணேசன் தலைமை வகித்தாா். இதில், பாரதியாா் சிலைக்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன், பாரத் அறிவியல், நிா்வாகவியல் கல்லூரி முதல்வா் குமாா், பேராசிரியா்கள் மகேஸ்வரி, வி.எஸ்.ஆா். செம்பியன், கல்லூரி மக்கள் தொடா்பு அலுவலா் எஸ். கணேசன், ஆடிட்டா் விஸ்வநாதன், ஓவியா் தேவநேசன், பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.