தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.15) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளா் ஜோ. சுகுமாா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் நகரத் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ரயிலடி, கீழவாசல், காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, சிவாஜி நகா், சீனிவாசபுரம், வண்டிகாரத் தெரு, நாகை சாலை, மகா்நோம்புச்சாவடி, எஸ்.எம். சாலை, வ.உ.சி. நகா், மேரீஸ் காா்னா், பூக்காரத் தெரு, அன்பு நகா், கோரிகுளம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மேலும், பொதுமக்கள் மின் தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம்.