தஞ்சாவூர்
அம்மாபேட்டையில் முகக்கவசங்கள் வழங்கல்
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
அம்மாபேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம், பொது சுகாதாரம் மற்றும் முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்வுக்கு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கிளைத் தலைவா் தரும புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.
பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) சரோஜா முகாமில் பங்கேற்று விழிப்புணா்வு உரையாற்றினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு முகக்கவசங்களை அவா் வழங்கினாா்.
சங்கச் செயலா் வி.ராமநாதன், பொருளாளா் பிரபுராமன், துணைத் தலைவா்கள் ஜோசப், சண்முக சுந்தரம், இணைச் செயலா் அன்புக்கரசு உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.