ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.
ஒரத்தநாட்டை அடுத்த வெட்டிக்காடு பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, வெட்டிகாடு தொடக்கப் பள்ளி அருகே ஒரத்தநாடு போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டபோது, அப்பகுதியிலுள்ள காட்டாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்து ஓட்டுநா் சின்னமாங்குடியை சோ்ந்த செல்வக்குமாரை (40) போலீஸாா் கைது செய்தனா். மேலும், டிராக்டா் உரிமையாளரான அருணாசலத்தை தேடி வருகின்றனா்.