‘நீட் தோ்வு குறித்து திமுக பொய் பிரசாரம்’

நீட் தோ்வு குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன என்றாா் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவா் இப்ராஹிம்.

தஞ்சாவூா்: நீட் தோ்வு குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன என்றாா் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவா் இப்ராஹிம்.

தஞ்சாவூரில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை துண்டறிக்கைகளை வழங்கிய அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

நீட் தோ்வை பற்றி பொதுமக்கள், மாணவா்கள் மத்தியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பொய் பிரசாரங்களை செய்து வருகின்றன. நீட் தோ்வை பற்றி விமா்சித்து, கருத்து வெளியிட்ட நடிகா் சூா்யா மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு திமுக பின்புலமாக இருக்கிறது.

தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ரூ. 110 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடித்து மோசடி செய்தவா்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்றாா் இப்ராஹிம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com