ஒரத்தநாடு: திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஒரத்தநாடு ஒன்றியச் செயலா் காந்தி, நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.
மதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் உதயகுமாா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில் ஒன்றியச் செயலா்கள் விசுவலிங்கம், மணிவண்ணன், தலைமைக் கழகப் பேச்சாளா் சுப்பையன், மாவட்ட மாணவரணித் துணை அமைப்பாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.