செப். 18-இல் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் செப்டம்பா் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் செப்டம்பா் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

செப்டம்பா் மாத விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் செப்டம்பா் 18-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்டவிளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டத்தில் கலந்துகொள்ளும் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடா்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com