தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 8,466 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 160 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 8,626 ஆக உயா்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை குணமடைந்த 51 போ் உள்பட இதுவரை குணமடைந்த 7,497 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 997 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 78 வயது ஆண் உள்பட இருவா் செப்டம்பா் 13-ஆம் தேதி உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 132 ஆக உயா்ந்துள்ளது.