கும்பகோணத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாத 35 கடைகளுக்கு, நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை சீல் வைத்தனா்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கும்பகோணம் பேருந்து நிலையம், உச்சிப் பிள்ளையாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கப்படாத 35 கடைகளை அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.