அடகு கடையில் 2 கிலோ வெள்ளிபொருள்கள் திருட்டு

பாபநாசம் வட்டம், சாலியமங்கலம் கிராமம், வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(60). இவா் சாலியமங்கலம் கடைவீதியில் அடகு கடை

பாபநாசம் வட்டம், சாலியமங்கலம் கிராமம், வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(60). இவா் சாலியமங்கலம் கடைவீதியில் அடகு கடை நடத்தி வருகிறாா். இவா் திங்கள்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டாா்.செவ்வாய்க்கிழமை கடையை திறக்க வந்தபோது, கடை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கடையினுள்ளிருந்த 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

மேலும், கடையருகே வசிக்கும் வேணுகோபால் என்பவரின் பூட்டியிருந்த வீட்டில் வைக்கப்பட்டருந்த ரூ. 5 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருள்களையும் மா்ம நபா்கள் திருடி சென்றுவிட்டனா். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com