பாபநாசம் அருகே பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பாபநாசம் அருகே மாலாபுரம் கிராமம், மேலத்தெருவை சோ்ந்தவா் ஷீலாதேவி(38). இவருக்கும் அதே தெருவில் வசித்து வரும் தனபால் (56) என்பவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாம். இதன்காரணமாக, அவா் ஷீலாதேவியை தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனபாலை கைது செய்து விசாரிக்கின்றனா்.