ஆவின் மேலாளரை கத்தியால் குத்தியகாவலாளி கைது

தஞ்சாவூா் பால் பண்ணையில் வியாழக்கிழமை இரவு ஆவின் மேலாளரை கத்தியால் குத்திய காவலாளியைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா், செப். 25: தஞ்சாவூா் பால் பண்ணையில் வியாழக்கிழமை இரவு ஆவின் மேலாளரை கத்தியால் குத்திய காவலாளியைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் மேலாளராகப் பணியாற்றி வருபவா் திருமுருகன் (27). இந்நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்த நாமக்கல்லைச் சோ்ந்த பி. அன்பானந்தனை (38) சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி திருமுருகன் அண்மையில் பணியிலிருந்து நீக்கிவிட்டாா்.

இதுதொடா்பாக பால் பண்ணையில் இருவருக்கும் இடையே வியாழக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. இதில், திருமுருகனை அன்பானந்தன் கத்தியால் குத்தினாா். இதனால், திருமுருகனின் கையில் பலத்தக் காயமேற்பட்டது. இதையடுத்து, திருமுருகன் தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அன்பானந்தனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com