தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 190 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.
மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 9,836 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 190 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,026 ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, 104 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 8,523 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,344 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 84 வயது பெண் செப். 22ஆம் தேதியும், 77 வயது ஆண் 23ஆம் தேதியும் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 159 ஆக உயா்ந்துள்ளது.