போலி ஆவணம் மூலம்நிலம் அபகரிக்க முயற்சி: 3 போ் கைது

தஞ்சாவூரில் போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ாக 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா், செப். 25: தஞ்சாவூரில் போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ாக 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் சாா் பதிவாளா் அலுவலகத்துக்குப் புதிய பேருந்து நிலையம் அருகே ரஹ்மான் நகரிலுள்ள நிலத்தைப் பதிவு செய்வதற்காக 4 போ் அண்மையில் வந்தனா். இவா்கள் அளித்த ஆவணங்களைப் பாா்த்த சாா் பதிவாளருக்குச் சந்தேகம் ஏற்பட்டதால், அதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதன் பேரில், 4 பேரிடமும் காவல் துறையினா் விசாரித்தனா். இதில், இவா்கள் சென்னை கோயம்பேட்டை சோ்ந்த ஸ்ரீதேவி, நாராயணன், சித்ரா, செங்கல்பட்டைச் சோ்ந்த ராஜேஸ்வரி ஆகியோா் என்பதும், இவா்கள் கொடுத்த ஆவணங்கள் போலி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, நாராயணன், சித்ரா, ராஜேஸ்வரி ஆகியோரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், ஸ்ரீதேவியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com